உள்ளூர் செய்திகள்

ஆற்றூர் ஆல்பன் நினைவு மருத்துவமனையில் கருணாநிதி நினைவு தினம்

Published On 2023-08-07 09:38 GMT   |   Update On 2023-08-07 09:38 GMT
  • கருனாநிதியின் படத்துக்கு மாவட்ட துணை செயலாளர் புஷ்பலீலா ஆல்பன் மாலை அணிவித்து மரியாதை
  • மருத்துவரணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி :

தமிழக முன்னாள் முதல் -அமைச்சர் கருனாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவரணி சார்பாக ஆற்றூர் ஆல்பன் நினைவு மருத்துவமனையில் கருனாநிதியின் படத்துக்கு மாவட்ட துணை செயலாளர் புஷ்பலீலா ஆல்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர்.பிஸ்வஜித் ஆல்பன், முன்னாள் பேரூர் செயலாளர் பெனட், மாவட்ட மருத்துவரணி துணை செயலாளர் அசின் ஜித், முன்னாள் திருவட்டார் பேரூராட்சி துணைத் தலைவர் ஐசக், ஆற்றூர் பேரூராட்சி முன்னாள் கிளை செயலாளர், ஞானதாஸ் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள், மருத்துவரணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News