உள்ளூர் செய்திகள்

நல்லம்பள்ளியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் இணைந்த மாற்று கட்சியினர்.

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

Published On 2023-01-23 09:34 GMT   |   Update On 2023-01-23 09:34 GMT
  • எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
  • நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தருமபுரி,

தருமபுரி சட்டமன்ற தொகுதி சார்பாக நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமையில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டார்.

தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாற்று கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் அமைப்பு செயலாளர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தருமபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி, தலைமைக் கழக பேச்சாளர் முஜிபுர் ரஹ்மான், பால்வளத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி, முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, நல்லம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி அதியமான் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் முனிராஜ், கிராம வளர்ச்சி குழு உறுப்பினர் பிரேம்குமார் மாவட்ட பிரதிநிதி ரம்யா குமார் மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News