உள்ளூர் செய்திகள்

கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், நந்தி பெருமான், பரமத்தி வேலூரில் பழமையான ஏகாம்பரநாதர், நந்தி பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளசிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

Published On 2023-08-14 12:48 IST   |   Update On 2023-08-14 12:48:00 IST
  • பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத கடைசி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
  • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத கடைசி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்த ரேஸ்வரர்,பரமத்தி வேலூ ரில் 400 ஆண்டுகள் பழமை யான எல்லையம்மன் ஆல யத்தில் உள்ள ஏகாம்ப ரேஸ்வரர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திரு வேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வட பழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பர்வதீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஆடி மாத தேய்பிறை பிரதோ ஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை களும்,சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News