உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே கூலித்தொழிலாளி தற்கொலை
- கூலி தொழிலாளியான இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாரியப்பன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 53). கூலி தொழிலாளியான இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதில் மனமுடைந்து கடந்த 11-ந்தேதி விஷம் குடித்து விட்டார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாரியப்பன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவேரிப்பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.