உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே கூலித்தொழிலாளி தற்கொலை

Published On 2022-09-13 15:13 IST   |   Update On 2022-09-13 15:13:00 IST
  • கூலி தொழிலாளியான இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
  • கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாரியப்பன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 53). கூலி தொழிலாளியான இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதில் மனமுடைந்து கடந்த 11-ந்தேதி விஷம் குடித்து விட்டார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாரியப்பன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவேரிப்பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News