உள்ளூர் செய்திகள்

டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்து டிரைவர் உட்பட 2 பேர் பலி

Published On 2025-02-07 10:36 IST   |   Update On 2025-02-07 10:36:00 IST
  • இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயக்கோட்டை:

உத்தனப்பள்ளி அருகே டிரைவர் தூக்க கலகத்தில் டேங்கர் லாரியை ஓட்டியதால் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் டிரைவர் உட்பட 2 பேர் பலியாகினர். ஆறாக ஓடிய பால் வீணானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு டேங்கர் லாரியில் 28 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு பால் ஏற்றி சென்றார். இந்த லாரியை நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த டிரைவர் ராஜேஷ்குமார் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் அந்த லாரியில் அருள் (வயது27) என்பவரும் பயணம் செய்துள்ளார்.

பால் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கரடிகுட்டை என்ற இடத்தில் சென்றபோது தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர் ராஜேஷ் குமாரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டேங்கர் லாரி டிரைவர் ராஜேஷ் குமார் மற்றும் அவருடன் பயணம் செய்த அருள் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தொடர்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் டேங்கர் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட பால் சாலையில் கொட்டி அந்த பகுதி முழுவதும் ஆறாக ஓடி வீணானது.

இந்த விபத்து குறித்து உத்தனபள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News