உள்ளூர் செய்திகள்

காரைக்காலில் ஓ.என்.ஜி.சி. சார்பில் இன்று காலை நடைபெற்ற மாரத்தான் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் மாரத்தான் போட்டி: மாவட்ட கலெக்டர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

Published On 2023-01-03 15:01 IST   |   Update On 2023-01-03 15:01:00 IST
  • ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 5 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது.
  • ஆண்கள், பெண்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

காரைக்காலில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 5 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியை காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட ஆண்கள், பெண்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த மாரத்தான் போட்டி காரைக்காலில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நிறைவு பெற்றது.

Tags:    

Similar News