உள்ளூர் செய்திகள்

பாலிடெக்னிக் கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-05-16 15:00 IST   |   Update On 2023-05-16 15:00:00 IST
  • வெளியே சென்ற மாணவி, மீண்டும் வீட்டிற்கு திரும்பிரவில்லை.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடிவருகின்றனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கெலப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி வெளியே செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு திரும்பிரவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News