உள்ளூர் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் மீது போக்சோவில் வழக்கு
- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார்.
- போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த இளையராஜா (வயது 35) என்பவர் அங்கு வந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார்.
இது குறித்து சிறுமியின் தரப்பில் திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற இளையராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.