உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்
- ஹரிஹரனிடம் கேட்ட போது அவர் இளம்பெண்ணை தாக்கி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் குளியல் அறையில் குளிக்கசென்றார்.
அப்போது குளியலறை ஜன்னலில் செல்போன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த செல்போனில் வீடியோபதிவாகி கொண்டு இருந்தது. விசாரணையில் அந்த செல்போன் எதிர்வீட்டில் வசிக்கும் ஹரிஹரன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் அதனை அவர் குளியல் அறை ஜன்னலில் வைத்து வீடியோ எடுத்தது தெரிய வந்தது.
இதுபற்றி ஹரிஹரனிடம் கேட்ட போது அவர் இளம்பெண்ணை தாக்கி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து கடம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.