உள்ளூர் செய்திகள்

மாணவிகளை ஆசிரியர் ஒருவர் ஆசீர்வதித்து அறிவுரை கூறினார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளை ஆசீர்வதித்த ஆசிரியர்

Published On 2023-03-13 15:09 IST   |   Update On 2023-03-13 15:09:00 IST
  • பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 5 பறக்கும் படை குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
  • பிளஸ்-1, பிளஸ்- 2 பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 3,892 மாணவர்களும், 4,320 மாணவிகளும் என மொத்தம் 8,212 பேர் எழுதுகின்றனர்.

அதேபோல பிளஸ்-1 பொதுத் தேர்வை 3,420 மாணவர்களும், 4,122 மாணவிகளும் என மொத்தம் 7,542 பேர் எழுதுகின்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 4,547 மாணவர்களும், 4,277 மாணவிகளும் என மொத்தம் 8,824 பேர் எழுதுகின்றனர்.

பிளஸ்-1, பிளஸ்- 2 பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாகையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் ஆசீர்வதித்து நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும் என அறிவுரை கூறினார்.

இந்த பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 5 பறக்கும் படை குழுவினர், 56 நிலையான பறக்கும் படை உறுப்பினர்களும் தயாராக உள்ளனர் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்வு மையங்களில் தேர்வு எண் எழுதும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News