உள்ளூர் செய்திகள்

வாலிபர் மர்ம சாவு

Published On 2022-10-27 14:41 IST   |   Update On 2022-10-27 14:41:00 IST
  • நண்பர்கள் அவரை எழுப்பினர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊட்டி,

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூர் கே.கே.நகரை சேர்ந்த மோகன் என்பவரது மகன் யுவராஜா (வயது 21). இவர் தனது நண்பர்கள் பூபதி, கணேஷ்குமார், ஜெகதீஷ் மற்றும் சிலருடன் தொரப்பள்ளியில் உள்ள ஒரு விடுதியில் தங்கினார். இரவு 11 மணிக்கு பெற்றோரிடம் செல்போனில் பேசினார். பின்னர் விடுதியில் தூங்கினார். நேற்று காலையில் நண்பர்கள் அவரை எழுப்பினர். ஆனால், அவர் எழ வில்லை. இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் யுவராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து மசினகுடி போலீசில் தந்தை மோகன் புகார் செய்தார். இதன் பேரில் மர்ம சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News