மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி மாணவிகளுக்கு விருது வழங்கி காட்சி.
உடுமலை அரசு பள்ளி மாணவிகளுக்கு காமராஜர் விருது
- 2021-2022 கல்வியாண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது பெற பள்ளிக்கல்வித்துறையால் தேர்வு செய்யப்பட்டனர்.
- திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி வழங்கினார்.
உடுமலை :
உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எஸ். சஹானா பர்வின், கோ. சி. யாழினி ஆகியோர் 2021-2022 கல்வியாண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது பெற பள்ளிக்கல்வித்துறையால் தேர்வு செய்யப்பட்டனர். விருது பெற்ற மாணவிகளுக்கு காமராசர் விருதுக்கான சான்றிதழை திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி வழங்கினார். 12 ம் வகுப்பு மாணவி எஸ். சஹானா பர்வின் வங்கிக்கணக்கில் ரொக்கப்பரிசு ரூ. 20ஆயிரமும், 10 ம் வகுப்பு மாணவி கோ. சி. யாழினி வங்கிக் கணக்கில் ரொக்கப்பரிசு ரூ.10ஆயிரமும் வழங்கப்பட்டது.
விருது பெற்ற மாணவிகளை பள்ளித்தலைமை ஆசிரியர் ப. விஜயா, உதவித்தலைமை ஆசிரியர்கள் ஏ. ஜெயராஜ், மஞ்சுளா, தமிழாசிரியர்கள் சின்னராசு, ராஜேந்திரன் உள்பட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் பாராட்டினர்.