உள்ளூர் செய்திகள்
- போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதால் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன், புது தெருவை சேர்ந்தவர் சந்துரு (வயது 30), இவர் செய்யார் டவுன், கண்ணியம் நகர் சந்திப்பில் காஞ்சிபுரம் சாலையில் பொது மக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறு செய்ததாக செய்யாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து ெசன்று சந்துருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமம், ரோட்டு தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (39), என்பவர் புதுப்பாளையம் கூட் ரோட்டில் பொது மக்களுக்கு இடையூறு செய்து ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இவரை தூசி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.