உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி

Published On 2023-05-04 09:00 GMT   |   Update On 2023-05-04 09:00 GMT
  • வருகிற 6 மற்றும் 7-ந் தேதிகளில் கண்காட்சி நடைபெறுகிறது.
  • 10 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று காய்கறி சிற்ப அலங்காரம் செய்யவுள்ளனர்.

ஊட்டி,

காய்கறி கண்காட்சியில் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் மக்காத குப்பைகளை கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வருகிற 6 மற்றும் 7-ந் தேதிகளில் காய்கறி கண்காட்சி கோத்தகிரி நேரு பூங்காவில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் காய்கறிகளான பிரமாண்ட சிற்பங்கள், பறவைகள், வனவிலங்குகளின் உருவங்கள் அமைக்கப்படும். மேலும் பொழுது போக்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

இந்த காய்கறி கண்காட்சியை காண வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வர். எனவே பூங்காவை அழகுபடுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தற்போது பூங்காவின் நுழைவு வாயில் அருகே எல். இ.டி விளக்குகளுடன் 'ஐ லவ் கோத்தகிரி' என்கிற வாசகம் மற்றும் மலர் அலங்காரத்துடன் ஒரு செல்பி ஸ்பாட், பூங்காவின் மையப் பகுதியில் பிரமாண்டமான பறவையின் சிறகு போன்ற வடிவத்திலான மற்றொரு செல்பி ஸ்டேண்ட் மற்றும் செயற்கை நீரூற்று அருகே நம்ம கோத்தகிரி என்ற வாசகத்துடன் கூடிய செல்பி ஸ்பாட் என 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 10 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று அரங்குகள் அமைத்து காய்கறி சிற்ப அலங்காரம் செய்யவுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் வகையில் தோட்டக்கலை துறை சார்பில் சுமார் 4 டன் எடை கொண்ட காய்கறிகளை கொண்டு ஒரு பிரதான காய்கறி சிற்பமும், 3 சிறிய சிற்பங்களும் அமைக்கப்படுகின்றன. மேலும் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் மக்காத குப்பைகளை கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பங்களும் இந்த கண்காட்சியில் இடம் பெறவுள்ளன.

20 அரங்குகள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்வது, கலை நிகழ்ச்சிகள் நடத்துமிடத்தை தீர்மானிப்பது, காய்கறி கண்காட்சியை சிறப்பாக நடத்துவது குறித்து குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார் தலைமையில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா, தோட்டக்கலை உதவி இயக்குநர் ஐஸ்வர்யா, தோட்டக்கலை அலுவலர் சந்திரன், செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் அரங்குகள் அமைப்போர் மற்றும் பிற துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News