உள்ளூர் செய்திகள்

தூக்கில் தொங்கிய 2 பேர் உடல்கள் மீட்பு

Published On 2022-09-29 09:21 GMT   |   Update On 2022-09-29 09:21 GMT
  • அழுகிய நிலையில் பிணம் கண்டெடுப்பு
  • போலீசார் விசாரணை

வேலூர்:

அணைக்கட்டு தாலுகா, டி.சி.குப்பம் அடுத்த கரடிகுடி காட்டுப்பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரி யாத நபர் தூக்கில் தொங்கினார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் இறந்து பல நாட்களாகி இருக்கும் என தெரிகிறது.

இதுகுறித்து வருவாய்த்துறையினர் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோபிநாதன், தனிப் பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோவிந் தசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டு சென்றனரா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

ஒடுகத்தூர் அடுத்த சேர் பாடி கூட்ரோடு கல்லுட்டை பகுதியில் ஆள் இல்லாத வீட்டின் முன்பு, அடையா ளம் தெரியாத 52 வயது மதிக்கத்தக்க நபர் தூக்குமாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.

உடல் அருகே மது பாட் டில்கள் கிடந்தன. இதைக்கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்து, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விஏஓ சரளா வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் அன் பழகன், ஏட்டு முத்துகுமரன் மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டு சென்றனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News