உள்ளூர் செய்திகள்

ஊசூரில் கிரிக்கெட் போட்டி

Published On 2022-12-19 15:31 IST   |   Update On 2022-12-19 15:31:00 IST
  • வெற்றி பெரும் அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசு, கோப்பை வழங்கப்படுகிறது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஊசூர், தெள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த இளைஞர்க ளுக்கான ஒரு மாதகாலம் நடக்க இருக்கும் மாபெரும் கிரிக்கெட் விளையாட்டு போட்டி தொடக்க விழா நேற்று ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகில் உள்ள மைதா னத்தில் தொடங்கியது.

முதல் நாள் தொடக்க விழாவில் மாவட்ட கவுன்சிலர் த.பாபு, ஊசூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரிகண்ணன், தெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்தனர். முதல் நாளான நேற்று 5-க்கும் மேற்ப்பட்ட அணிகள் பங்கேற்று ஆர்வமுடன் விளையாடின.

இதனையடுத்து போட்டியில் வெற்றி பெறும் அணிகள் அடுத்தடுத்த நடக்க இருக்கும் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதற்கான போட்டிகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடத்தபடுகிறது.

ஒரு மாதம் நடக்கும் இந்த போட்டிகளில் இறுதியாக வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.30ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 7 அடி உயர கோப்பையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் 5 அடி உயர கோப்பையும் இதனைத்தொடர்ந்து 10 பரிசுகள் மற்றுன் கோப்பைகள் வழங்கப்பட உள்ளனர்.

மேலும் சிறப்பாக விளையாடும் வீரருக்கு பல்வேறு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது.

இதில் நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடிய வாலிபர் ஒருவருக்கு தெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ் ரூ.500 அன்பளிப்பாக வழங்கினார். இதில் தெள்ளூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News