உள்ளூர் செய்திகள்
மீன் இறங்குதளம் திறப்பு விழாவில் விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு
- மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என். ஸ்ரீதர் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
- நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மேல மணக்குடி கிராமத்தில் 29.5 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட மீன் இறங்கு தளத்தினை காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து இறங்கு தளத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என். ஸ்ரீதர் குத்து விளக்கு ஏற்றி வைக்க, அவருடன் விஜய் வசந்த் எம்.பி. இணைந்து திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.