உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதலி வீட்டில் பூக்கடைக்காரர் தூக்கில் தொங்கினார்

Published On 2022-12-11 14:22 IST   |   Update On 2022-12-11 14:22:00 IST
  • கள்ளக்காதலி வீட்டில் பூக்கடைக்காரர் தூக்கில் தொங்கினார்.
  • சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

சாத்தூர் அருகே முள்ளிசெவல் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி வேல் (வயது 50), பூக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி முத்துலட்சுமி (48). சக்திவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று சக்திவேல் ரத்த காயங்களுடன் வீட்டுக்கு வந்துள்ளார். மனைவி முத்துலட்சுமி அதுபற்றி விசாரிக்கும்போது, கீழே விழுந்து விட்டதாக கூறி உள்ளார்.

ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக மனைவி கூறியபோது, அதை மறுத்து விட்டு கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் லட்சுமி வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News