உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மர்ம சாவு

Published On 2022-12-06 12:57 IST   |   Update On 2022-12-06 12:57:00 IST
  • கோமதி என்பவருக்கும், அழகுசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
  • இந்த நிலையில் கோமதி அழகுசமுத்திரத்தில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள திண்டமங்கலம், பாரதிநகர் பகுதியைசேர்ந்தவர் சின்னப்பன் (வயது 57).

இவருடைய மகள் கோமதி என்பவருக்கும், அழகுசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதுவரை குழந்தைகள் இல்லை என்பதால் கணவர் மற்றும் மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் கோமதியிடம் தகராறு செய்து வந்தனர்.

மேலும் கணவர் சுரேஷ், பெற்றோர் வீட்டில் பணம் வாங்கி வரச்சொல்லி அடிக்கடி கோமதியை தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோமதி அழகுசமுத்திரத்தில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த கோமதியின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு சென்று மகள் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் தனது மகள் தற்கொலை செய்யவில்லை என்றும் சாவில் சந்தேகம் உள்ளதா–கவும் கூறி தாரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் விசா–ரணை நடத்தி வருகிறார். கோமதிக்கு திருமணம் நடந்து 2 வருடங்கள் ஆவதால் காவல்துணை கண்காணிப்பாளர் சங்கீதா, மேட்டூர் வருவாய் கோட்டாச்சியர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News