கதம்பம்

நான்கு தமிழ்

Published On 2023-06-27 14:25 IST   |   Update On 2023-06-27 14:25:00 IST
  • சுந்தரர் மிடுக்குள்ளவர்; கயிலையில் சிவப்பரம்பொருளின் அணுக்கத் தொண்டராக இருந்தவர்;
  • அப்பர், எண்பது வயது முதியவர்; குறைகளை உணர்ந்துத் திருந்தியவர்;

இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ் உண்டு என்பது யாவரும் அறிந்ததே. வாரியார் சுவாமிகள் இயலில் நான்கு தமிழ் உண்டு என்கிறார். அவை தேவாரத் திருவாசகங்களில் உண்டு என்கிறார்!

கொஞ்சு தமிழ்:

திருஞானசம்பந்தர் உமை அன்னை தந்த ஞானப்பாலை உண்டு தமது மூன்றாவது வயதிலேயே "தோடுடைய செவியன்'' என்று தம் மழலை மொழியில் கொஞ்சிப் பாடினார். அதனால் அவர் தமிழ் கொஞ்சு தமிழ்.

விஞ்சு தமிழ்:

சுந்தரர் மிடுக்குள்ளவர்; கயிலையில் சிவப்பரம்பொருளின் அணுக்கத் தொண்டராக இருந்தவர்; திருமுனைப்பாடி நாட்டு அரசராகிய நரசிங்கமுனையர் வளர்ப்புப் பிள்ளை; ஆண்டவரிடத்து அவர் உரிமையுடன் பேசுவது இயல்பு தானே? அதனால் அவர் தமிழ் விஞ்சு தமிழ்.

கெஞ்சு தமிழ் :

அப்பர், எண்பது வயது முதியவர்; குறைகளை உணர்ந்துத் திருந்தியவர்; தன்னைத் தாழ்த்திக் கொண்டு மன்றாடுபவர்; அதனால் அவர் தமிழ் கெஞ்சு தமிழ்.

நெஞ்சு தமிழ்:

மாணிக்கவாசகர், "அழுதால் உன்னைப் பெறலாமே''என்றவர்; பக்தியால் நெஞ்சுருகி, நைந்து நெகிழ்ந்த உள்ளத்துடன் உருகுவார். அதனால் அவர் தமிழ் நெஞ்சு தமிழ்.

-வீரமணி

Tags:    

Similar News