இந்தியா
விவசாயிகள் போராட்டம் நடத்திய காட்சி.
பிரதமர் மோடி முகமூடி அணிந்து விவசாயிகள் போராட்டம்
- பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடி அணிந்து விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
- மத்திய அரசின் கொள்கைகள் விவசாயத் துறையை கார்ப்பரேட் துறைக்கு தாரை வார்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஆந்திர மாநில விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் 2 நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடி அணிந்து விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
மின்சார மசோதா 2020 உடனடியாக ரத்து செய்ய வேண்டும். விவசாய மோட்டார்களுக்கு முன்பணம் செலுத்திய ஸ்மார்ட் மின் மீட்டர்களை மாநில மற்றும் மத்திய அரசுகள் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆட்சிக்கு வந்தவுடன், பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளை வசதியாக புறக்கணித்தது. மத்திய அரசின் கொள்கைகள் விவசாயத் துறையை கார்ப்பரேட் துறைக்கு தாரை வார்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.