இந்தியா

டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு

Published On 2025-02-19 20:21 IST   |   Update On 2025-02-20 06:52:00 IST
  • 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
  • டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி பத்து நாட்களை கடந்துவிட்டது. நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

எனினும், டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லாத சூழல் தான் நிலவுகிறது. இந்த நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்நிலையில், டெல்லியில் முதலமைச்சராக ரேகா குப்தா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ரேகா குப்தா டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

நாளை (பிப்ரவரி 20) நடைபெறும் இந்த நிகழ்வில் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News