இந்தியா

மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து- 2 பேர் உயிரிழப்பு

Published On 2025-02-19 15:49 IST   |   Update On 2025-02-19 15:49:00 IST
  • அதிவேகத்தின் காரணமாக வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்து.
  • விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் நகார்கோவிலில் இருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழந்து விபத்துக்குள்ளானது.

மூணாறு எக்கோ பாயிண்ட் அருகே அதிவேகத்தின் காரணமாக வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News