இந்தியா

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிர்ப்பு கூட தெரிவிக்காத பிரதமர் மோடி: கார்கே குற்றச்சாட்டு

Published On 2025-02-19 15:50 IST   |   Update On 2025-02-19 15:50:00 IST
  • பொருளாதார விவகாரத்தில் அமெரிக்க நம்மை மிகவும் காயப்படுத்தியுள்ளது.
  • அவர்கள் வலுக்கட்டாயமாக நஷ்டத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை நம் மீது திணிக்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்றபின், வரி விதிப்பை அதிகப்படுத்தியுள்ளார். அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்தார். குறிப்பாக மெக்சிகோ, கனடா, சீனா போன்ற நாடுகளுக்கு எதிராக இந்த வரிவதிப்பை அமல்படுத்தினார்.

இதற்கிடையே இந்திய பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்கா சென்ற அவர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு சற்று முன்னதாக பரஸ்பர விரி விதிப்பு முறையை அறிவித்தார்.

பரஸ்பர வரி என்பது அமெரிக்க உற்பத்தி பொருட்களை ஒரு நாடு இறக்குமதி செய்தால் அதற்கு வரி விதிக்கப்படும். அதேபோல் அந்த நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி வதிக்கப்படும்.

அந்த வகையில் இந்தியா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி வதிக்கிறது. அதேபோல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

இந்த விவகாரத்தில் தன்னுடன் யாரும் விவாதம் செய்ய முடியாது என்பதை வெளிப்படையாக தெரிவித்தார். பிரதமர் மோடி உடனான பேச்சுவார்த்தையின்போது இதை உறுதியாக தெரிவித்தாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், டிரம்ப் உடனான பேச்சுவார்த்தையின்போது நாடு கடத்தப்படும் இந்தியர்கள் விலங்கிட்டு அனுப்பி வைப்பது தொடர்பாக மோடி கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மோடி தனது எதிர்ப்பு தெரிவிப்பதில் தோல்வியடைந்து விட்டார் என கார்கே குற்ற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கார்கே கூறியதாவது:-

பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போதிலும், அமெரிக்க இந்தியாவுக்கு நாடு கடத்தியவர்களை கையில் விலங்கிட்டுதான் அனுப்பி வைத்துள்ளது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்த இழிவுப்படுத்தும் விவகாரத்தில் முறையான எதிர்ப்பை அமெரிக்காவுக்கு தெரிவிப்பதில் நமது அரசு தோல்வியடைந்துவிட்டது.

பொருளாதார விவகாரத்தில் அமெரிக்க நம்மை மிகவும் காயப்படுத்தியுள்ளது. நமது மீது பரஸ்பர விதியை சுமத்தியுள்ளது. ஆனால், இதற்கு பிரதமர் மோடி எதிர்ப்புக்கூட தெரிவிக்கவில்லை. அவர்கள் வலுக்கட்டாயமாக நஷ்டத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை நம் மீது திணிக்கிறார்கள். அதை நம் அரசாங்கம் அமைதியாக ஏற்றுக்கொண்டு வருகிறது. இதன்மூலம் இந்தியா மற்றும் இந்தியா மக்களை இழிவுப்படுத்துவது தெளிவாகிறது.

இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

பரஸ்பர வரி விதிப்பால் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என பொருளாதார வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News