இந்தியா
null

விளம்பரம் திரையிட்ட திரையரங்குக்கு ரூ. 1 லட்சம் அபராதம் - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

Published On 2025-02-19 08:50 IST   |   Update On 2025-02-19 08:51:00 IST
  • ஆன்லைன் புக்கிங் தளத்தையும் குற்றம்சாட்டி இருந்தார்.
  • கணக்கிட முடியாத இழப்புகளைச் சந்தித்துள்ளார்.

திரையரங்கில் நீண்ட நேரம் விளம்பரங்கள் ஒளிபரப்பியதால் ஆத்திரம் அடைந்த நபர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திரையரங்க நிர்வாகம் (PVR & INOX) தனது நேரத்தை 25 நிமிடங்கள் வரை வீணடித்தாக கூறிய நபர் திரையரங்கம் மட்டுமின்றி அதன் ஆன்லைன் புக்கிங் தளத்தையும் குற்றம்சாட்டி இருந்தார்.

கடந்த 2023-ம் ஆண்டு சம்பவ நாளில் மாலை 4.05 மணிக்கு 'சாம் பகதூர்' என்ற படத்தை பார்க்க அபிஷேக் திரையரங்கத்திற்கு சென்றுள்ளார். திரைப்படம் மாலை 6.30 மணிக்குள் முடிந்திருக்க வேண்டும். இதன் பிறகு செய்வதற்கென சில வேலைகளை அபிஷேக் திட்டமிட்டிருந்துள்ளார்.

எனினும், 4.05 மணிக்கு தொடங்க வேண்டிய திரைப்படம் டிரெய்லர்களின் விளம்பரங்கள் மற்றும் டிரெய்லர்கள் ஒளிபரப்பிய பிறகு மாலை 4.30 மணிக்குத் தான் தொடங்கியுள்ளது. இதனால் தனக்கு கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரை வீணானது என அபிஷேக் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

"புகார்தாரரால் அன்றைய தினம் திட்டமிடப்பட்ட பிற ஏற்பாடுகள் மற்றும் சந்திப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை, இழப்பீடாக பணத்தின் அடிப்படையில் கணக்கிட முடியாத இழப்புகளைச் சந்தித்துள்ளார்," என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

"நேரம் பணமாகக் கருதப்படுகிறது" என்று கூறி, புகார்தாரருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய திரையரங்கு நிறுவனங்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திரையரங்குகள் நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் புகார்தாரரின் நேரத்தை வீணடித்ததற்காக ரூ.50,000, மன வேதனை ஏற்படுத்தியதற்கு ரூ.5,000 மற்றும் "புகாரைப் பதிவு செய்ததற்காக ரூ.10,000" செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் நீதிமன்றம் திரையரங்கு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.

இருப்பினும், டிக்கெட் முன்பதிவு தளம் விளம்பரங்களின் ஸ்ட்ரீமிங் நேரத்தை கட்டுப்படுத்தாது என்பதால், அது எந்த தொகையையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

Tags:    

Similar News