இந்தியா

இமயமலைக்கு எப்போது?: பவன் கல்யாணிடம் நகைச்சுவையாக பேசிய பிரதமர் மோடி

Published On 2025-02-21 04:15 IST   |   Update On 2025-02-21 04:15:00 IST
  • டெல்லி முதல் மந்திரி பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பவன் கல்யாண் பங்கேற்றனர்.
  • அப்போது, நீங்கள் இமயமலை செல்ல திட்டமிட்டுள்ளீர்களா என பிரதமர் கேள்வி எழுப்பினார்.

புதுடெல்லி:

டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய முதல் மந்திரியாக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார். டெல்லியின் 4-வது பெண் முதல் மந்திரி குப்தா ஆவார்.

தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி ரேகா குப்தாவின் பதவியேற்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினரை பிரதமர் மோடி வரவேற்றார்.

மகாராஷ்டிரா துணை முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ஆகியோருடன் பிரதமர் மோடி உரையாடினார்.

இந்நிலையில், ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண், பிரதமர் மோடி இடையிலான உரையாடல் கவனத்தை ஈர்த்தது.

இதுதொடர்பாக பவன் கல்யாண் கூறுகையில், பிரதமர் எப்போதும் என்னுடன் நகைச்சுவையாகப் பேசுவார். அவர் என் உடையைப் பார்த்து, நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இமயமலைக்குச் செல்கிறேனா என கேட்டார். அதற்கு பிரதமரிடம், தான் இன்னும் எங்கும் செல்லவில்லை. இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன. இமயமலை காத்திருக்க முடியும் என நகைச்சுவையாகக் கூறினார்

Tags:    

Similar News