இந்தியா (National)

கேரளாவில் 5-ந் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

Published On 2024-09-30 06:39 GMT   |   Update On 2024-09-30 06:39 GMT
  • 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
  • கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வருகிற 5-ந் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை இருக்கும் என்றும் 64.5 மி.மீட்டர் முதல் 115.5 மி.மீட்டர் வரை மழை இருக்கும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News