இந்தியா
காங்கிரசுக்கு 'கை' கொடுத்த ராகுல் காந்தியின் யாத்திரை
- மைசூருவில் மட்டும் 11 தொகுதிகளில் 8 தொகுதிகளை காங்கிரஸ் தன் வசப்படுத்தியுள்ளது.
- பெல்லாரி மாவட்டத்தை காங்கிரஸ் முழுமையாக கைப்பற்றியது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒற்றுமை யாத்திரை தொடங்கினார். இந்த யாத்திரையானது கர்நாடக மாநிலத்தில் உள்ள 7 மாவட்டங்களில் நடைபெற்றது.
இந்நிலையில், கர்நாடக தேர்தலில் ராகுல் காந்தியின் யாத்திரை கை கொடுத்துள்ளது.
சாம்ராஜ் நகர், மைசூரு, மாண்டியா, தும்கூரு, பெல்லாரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள 51 தொகுதிகளில் 36 தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
மைசூருவில் மட்டும் 11 தொகுதிகளில் 8 தொகுதிகளை காங்கிரஸ் தன் வசப்படுத்தியுள்ளது.
பெல்லாரி மாவட்டத்தை காங்கிரஸ் முழுமையாக கைப்பற்றியது.