15 மாதங்களில் இரண்டு முறை மட்டுமே சட்டசபைக்கு வருகை: கே.சி.ஆர். மீது ரேவந்த் ரெட்டி விமர்சனம்
- எதிர்க்கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் 15 மாதங்களில் இரண்டு முறை மட்டுமே சட்டசபை வந்துள்ளார்.
- அவர் 57 லட்சத்திற்கு மேல் அரசு சம்பளத்தை பெற்றுள்ளார்.
தெலுங்கானா சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அவையில் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, சந்திரசேகர ராவ் சட்டசபைக்கு வராதது குறித்து விமர்சித்து பேசினார்.
இது தொடர்பாக ரேவந்த ரெட்டி கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் 15 மாதங்களில் இரண்டு முறை மட்டுமே சட்டசபை வந்துள்ளார். அவர் 57 லட்சத்திற்கு மேல் அரசு சம்பளத்தை பெற்றுள்ளார். மக்களை அவர்களுடைய தலைவிதிக்கே விட்டுள்ளார். மத்திய அரசு என்பது மாநிலங்களுக்கான ஒன்றியம். நாட்டின் பிரதமர் எந்த முதலமைச்சருக்கும் உண்மையிலேயே மூத்த சகோதரர் போன்றவர்.
இவ்வாறு ரேவந்த் ரெட்டி கூறினார்.
ரேவந்த் ரெட்டி அடிக்கடி டெல்லி செல்கிறார் என பிஆர்எஸ் கட்சி குற்றஞ்சாட்டியதற்கு, ரேவந்த் ரெட்டி பதில் கூறினார். ரேவந்த ரெட்டி பிரதமரிடம் 2036 ஒலிம்பிக் போட்டியை ஐதராபாத்தில் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு துறைக்கான நிலத்தை மாநில அரசுக்கு மாற்ற ஒப்புக்கொண்டதற்கான பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பாராட்டு தெரிவித்தார்.