இந்தியா

முஸ்லிம் ஊழியர்கள் மாலை 4 மணிக்கு வீடு செல்லலாம்: ரம்ஜான் பண்டிகைக்காக சலுகை அறிவித்த தெலுங்கானா அரசு

Published On 2025-02-18 17:30 IST   |   Update On 2025-02-18 17:30:00 IST
  • முஸ்லிம்களுக்கு பணி நேரத்தைக் குறைத்து தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
  • தெலுங்கானா அரசின் இந்த அறிக்கைக்கு அம்மாநில பா.ஜ.க. கடும் விமர்சனம் செய்து வருகிறது.

ஐதராபாத்:

தெலங்கானாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்துவருகிறது. முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டி பதவி வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்தே முஸ்லிம்களுக்கு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்க உள்ள நிலையில், முஸ்லிம்களுக்கு பணி நேரத்தைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மார்ச் 1 அல்லது 2-ம் தேதி பிறையைப் பொறுத்து தொடங்கும் ரமலான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே வீடு திரும்பலாம் என்ற உத்தரவை தெலுங்கானா அரசு பிறப்பித்துள்ளது.

அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், அவுட்சோர்சிங், வாரியம் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்குப் பொருந்தும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவசரநிலை ஏற்பட்டால் ஊழியர்கள் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்றும் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா அரசின் இந்த அறிக்கையை அம்மாநில பா.ஜ.க. விமர்சித்து வருகிறது. தெலங்கானா அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் தந்திரம். நவராத்திரி விரதத்தின்போது இந்துக்களுக்கு இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி வருகிறது.

Tags:    

Similar News