இந்தியா
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயை தடுக்க 6 மாதங்களில் தடுப்பூசி
- 16 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே தடுப்பூசியை பெற தகுதியுடையவர்கள்.
- புற்றுநோய்களை எதிர்த்துப் போராட 6 மாதங்களுக்குள் தடுப்பூசி கிடைக்கும்.
மும்பையில் மத்திய மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை இணைமந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மருத்துவமனைகளில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த நோயை முன்கூட்டியே கண்டறிவதற்காக பகல்நேர பராமரிப்பு புற்றுநோய் மையங்களை நாங்கள் அமைத்து வருகிறோம்.
பெண்களை கடுமையாக பாதிக்கும் புற்றுநோய்களை எதிர்த்துப் போராட 6 மாதங்களுக்குள் தடுப்பூசி கிடைக்கும்.
16 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே இந்த தடுப்பூசியைப் பெற தகுதியுடையவர்கள். இந்த தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி முழுமையடையக்கூடும். மருந்து சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரவிருக்கும் தடுப்பூசி மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களை கட்டுப்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.