VIDEO: ஆட்டோ ஓட்டுநருடன் கைகலப்பு.. கன்னத்தில் அறை வாங்கிய சிறிது நேரத்தில் பலியான முன்னாள் எம்எல்ஏ
- ஆட்டோ ஓட்டுநர் அவரது காரைத் துரத்திச் சென்று லாட்ஜ் முன் வைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
- ஆனால் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் ஆட்டோ ஓட்டுநர் அறைந்த சிறிது நேரத்தில் கோவா முன்னாள் எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் வேலை நிமித்தமாக கோவாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் லாவு மம்லதார் (68) சென்றிருந்தார்.
நேற்று அவரது கார் கார் காதேபஜார் அருகே ஒரு ஆட்டோவுடன் மோதியதாகக் கூறப்படுகிறது. மோதிய பின்னர் அவர் தனது காரில் அவர் தங்கியிருந்த ஸ்ரீனிவாஸ் லாட்ஜ் நோக்கிச் சென்றார்.
ஆட்டோ ஓட்டுநர் அவரது காரைத் துரத்திச் சென்று லாட்ஜ் முன் வைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை ஆட்டோ ஓட்டுநர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு, மம்லதார் லாட்ஜ் படிக்கட்டுகளில் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு அங்கிருத்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
லாவு மம்லதார், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி சார்பில் (எம்ஜிபி) 2012-2017 வரை கோவா எம்எல்ஏவாக இருந்தார். 2022 இல் காங்கிரசில் சேர்ந்தார். அதே ஆண்டு மட்காய் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.