கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

Published On 2025-03-04 14:08 IST   |   Update On 2025-03-04 14:13:00 IST
  • முதல் அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
  • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

துபாய்:

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில், துபாயில் முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை.

ஆஸ்திரேலிய அணியில் கூப்பர் கோனோலி, தன்வீர் சங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News