கிரிக்கெட் (Cricket)
null

வீடியோ: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: இந்திய அணி வெற்றி பெற ரசிகர்கள் பிரார்த்தனை

Published On 2025-03-04 11:31 IST   |   Update On 2025-03-04 13:22:00 IST
  • சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அனிகள் இன்று மோதுகின்றனர்.
  • இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். நாக் அவுட் சுற்றில் கடந்த 14 வருடங்களாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றது இல்லை.

மேலும் இந்தியாவுக்கு எதிராக டிராவிஸ் ஹெட் எப்போதுமே சிறப்பாக விளையாடி வருகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக் கோப்பை, பார்டர் கவாஸ்கர் தொடர் என அனைத்து போட்டிகளிலும் இந்திய அணிக்கு சிம்ம சொப்பனாக ஹெட் திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணி வெற்றி பெற வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற கோவிலில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் புகைப்படங்களை வைத்து வேண்டிக் கொண்டனர். இதே போல் பல இடங்களில் இந்திய அணி வெற்றி பெற ரசிகர்கள் சிறப்பு யாகங்களும் நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News