null
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் ஹெட் விக்கெட் - கணித்த அஸ்வின் - முடித்த வருண்
- முகமது ஷமி பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கானலி டக் அவுட்டாகி வெளியேறினார்.
- போட்டியின் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி முதல் பந்திலேயே ஹெட் விக்கெட்டை தூக்கினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
முகமது ஷமி பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கானலி டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஹெட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார்.
போட்டியின் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி முதல் பந்திலேயே ஹெட் விக்கெட்டை தூக்கினார். இதனால இந்திய அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் ஹெட் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்துவார் என்று முன்னாள் இந்திய வீரர் அஸ்வின் தெரிவித்திருந்தார்..
இது குறித்து பேசிய அஸ்வின், "இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் அற்புதமாக செயல்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் அரையிறுதியில் வெல்ல முடியும்.அதனால் டிராவிஸ் ஹெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்துவதற்கு நான் வருண் சக்ரவர்த்திக்கு புதிய பந்தில் பந்துவீச வாய்ப்பு தருவேன். அதிலும் குறிப்பாக ஹெட்க்கு வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் வாய்ப்பை கூட கொடுக்க வேண்டாம். உடனடியாக வருணிடம் பந்தை கொடுங்கள். முதல் 10 ஓவர்களில் சுழற்பந்து வீச்சை சமாளிக்க ஹெட்டிற்கு சவால் விடுவேன். இதுவே எனது உத்தியாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.