ஐ.பி.எல்.(IPL)
கலீல் அகமது அபாரம்: மும்பை இந்தியன்ஸ் 10 ஓவரில் 82/3
- ஐபிஎல் 2025 சீசனின் 3வது போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
- முதலில் களமிறங்கிய மும்பை அணியில் ரோகித் சர்மா டக் அவுட்டானார்.
சென்னை:
ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி, மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்குகிறது. முதல் ஓவரின் 4வது பந்தில் ரோகித் சர்மா டக் அவுட்டானார். ரியான் ரிக்கல்டன் 13 ரன்னும், வில் ஜாக்ஸ் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மும்பை அணி 36 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.
4வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ்-திலக் வர்மா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி வருகிறது.
மும்பை அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.