கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: மனைவிகளை அழைத்து செல்ல இந்திய வீரர்களுக்கு தடை?

Published On 2025-02-13 18:17 IST   |   Update On 2025-02-13 18:17:00 IST
  • 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.
  • இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.

பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்களுடன் அவர்களது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து செல்ல அனுமதி கிடையாது என தகவல் வெளியாகி உள்ளது. பிசிசிஐயின் புதிய பயணக் கொள்கை இந்தப் போட்டியுடன் முதல் முறையாக அமலுக்கு வருகிறது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News