கிரிக்கெட் (Cricket)

வங்கதேச தொடரில் சாம்சனுக்கு புதிய பொறுப்பு- சூர்யகுமார் யாதவ்

Published On 2024-10-06 01:36 GMT   |   Update On 2024-10-06 01:36 GMT
  • இந்தியா வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது.
  • இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக சாம்சன் களமிறங்க உள்ளார்.

குவாலியர்:

இந்தியா-வங்கதேச அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குவாலியரில் இன்று நடக்கிறது. வங்கதேச கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து இந்தியா-வங்கதேச அணிகள் இடையிலான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீமந்த் மாதவ்ராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா களமிறங்குவார் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை சஞ்சு சாம்சன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Tags:    

Similar News