விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்: மல்யுத்தத்தில் காலிறுதிக்கு முன்னேறினார் ரித்திகா ஹூடா

Published On 2024-08-10 10:00 GMT   |   Update On 2024-08-10 10:00 GMT
  • இந்திய வீராங்கனை ரித்திகா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார்.
  • இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலம் வென்றார்.

பாரீஸ்:

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா, ஹங்கேரியின் நாகி பெர்னட்டை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியில் ரித்திகா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இறுதியில், ரித்திகா 12-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News