டென்னிஸ்

வின்ஸ்டன் சலேம் ஓபன்: தக்ஷிணேஸ்வரர் சுரேஷ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது

Published On 2024-08-20 16:05 GMT   |   Update On 2024-08-20 16:05 GMT
  • அமெரிக்காவில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
  • இதில் இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி வெற்றி பெற்றது.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இந்த தொடரில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ்-இங்கிலாந்தின் லூகா பவ் ஜோடி, உருகுவேயின் ஏரியல் பெஹர்-அர்ஜெண்டினாவின்ஆண்ட்ரஸ் மால்டெனி ஜோடி உடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி 6-4, 5-7, 10-8 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் முதல் சுற்றில் தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News