தமிழ்நாடு (Tamil Nadu)

தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

Published On 2024-08-30 02:33 GMT   |   Update On 2024-08-30 02:33 GMT
  • நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் வரும் செப்டம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் வரும் செப்டம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012) வரும் செப்டம்பர் 1, 8, 15, 22, 29 அக்டோபர் 6, 13, 20, 27 நவம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011) வரும் செப்டம்பர் 2, 9, 16, 23, 30 அக்டோபர் 7, 14, 21, 28 நவம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News