தமிழ்நாடு (Tamil Nadu)

கொடநாடு வழக்கு - தொலைபேசி அழைப்புகள் குறித்து இன்டர்போல் விசாரிக்க வேண்டும்: முதலமைச்சர்

Published On 2024-06-29 06:08 GMT   |   Update On 2024-06-29 06:08 GMT
  • 2026 சட்டசபை தேர்தலிலும் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம்.
  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

சென்னை:

கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் கூறியதாவது:

* மக்களவை தேர்தலில் 40க்கு 40 வெற்றி என்ற பெருமிதத்துடன் சட்டசபைக்கு வந்துள்ளோம்.

* பொய் பிரசாரங்களை முறியடித்து செய்கூலி சேதாரம் இல்லாத வெற்றியை மக்கள் திமுக கூட்டணிக்கு வழங்கி உள்ளார்கள்.

* 2026 சட்டசபை தேர்தலிலும் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம்.

* திமுக அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் பேரில் இதனை துணிச்சலுடன் சொல்கிறேன்.

* மக்களவை தேர்தல் முடிவுகளின்படி 221 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது.

* மக்கள் மனதில் யார் உள்ளார்கள், மக்கள் யாரை புறக்கணித்தார்கள் என்பதை இந்த வெற்றி உணர்த்தும்.

* தேர்தல் தோல்வியின் தாக்கத்தால் கள்ளச்சாராய விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கையில் எடுத்து வருகின்றன.

* கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்தில் அரசு துரித நடவடிக்கை எடுத்தது.

* சாத்தான்குளம் சம்பவத்தை அப்போதைய அதிமுக அரசு மறைக்க நினைத்தது. அதனால் திமுக சிபிஐ விசாரணை கேட்டது.

* கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் உடனுக்குடன் எடுக்கப்பட்டன.

* கள்ளக்குறிச்சி சம்பவம் போல் இனி நடந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. தான் பொறுப்பு என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 8 செல்போன், 4 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் 8,000 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

* கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதனை இன்டர்போல் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News