தமிழ்நாடு

சுதந்திரப் போராட்டத்தில் விடுதலைக் கனலை மூட்டியவர் சுப்பிரமணிய சிவா- அண்ணாமலை புகழஞ்சலி

Published On 2024-07-23 06:56 GMT   |   Update On 2024-07-23 06:56 GMT
  • பத்திரிகையாளர், புரட்சியாளர், சன்னியாசி, சமூகச் சீர்திருத்தவாதி எனப் பன்முகம் கொண்டவர்.
  • மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோரின் நெருங்கிய நண்பர்.

சென்னை:

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில்,

தமது பேச்சு மற்றும் எழுத்துக்கள் மூலம், சுதந்திரப் போராட்டத்தில் விடுதலைக் கனலை மூட்டிய அமரர் சுப்பிரமணிய சிவா நினைவு தினம் இன்று.

பத்திரிகையாளர், புரட்சியாளர், சன்னியாசி, சமூகச் சீர்திருத்தவாதி எனப் பன்முகம் கொண்டவர். ஊர் ஊராக நடந்து சென்று சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவர். மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஆகியோரின் நெருங்கிய நண்பர்.

தங்களுடைய உயிரைத் துச்சமென எண்ணிப் போராடிய தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு பாஜக சார்பாக புகழஞ்சலி செலுத்தி வணங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News