தமிழ்நாடு (Tamil Nadu)

நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து

Published On 2023-12-19 11:43 GMT   |   Update On 2023-12-19 11:43 GMT
  • சுரங்கம் 2ல் நிலக்கரி வெட்டி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் சேதம்.
  • தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் என்எல்சி நிர்வாகம் அறிவிப்பு.

நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கன்வேயர் பெல்ட் இயந்திரம் எரிந்து சேதமடைந்துள்ளது.

சுரங்கம் 2ல் நிலக்கரி வெட்டி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் இயந்திரத்தில் தீப்பற்றியது.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

தீ விபத்தால் யாருக்கும் ஆபத்து இல்லை எனவும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News