தமிழ்நாடு (Tamil Nadu)

உதயநிதிக்கு, துணை முதல்வர் பொறுப்பு வழங்கியது ஏன்?- முதலமைச்சர் விளக்கம்

Published On 2024-09-29 16:29 GMT   |   Update On 2024-09-29 16:29 GMT
  • அமைச்சரவையில் இணைந்துள்ள செந்தில் பாலாஜி, கோவி. செழியன், ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோருக்கும் வாழ்த்துகள்.
  • மக்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்!

அமைச்சர் உதயநிதிக்கு, துணை முதல்வர் பொறுப்பு வழங்கியது ஏன் ? என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகச் சிறப்பாகச் செயல்படும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குத் துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனக்குத் துணையாக அல்ல; நாட்டு மக்களுக்குத் துணையாக அவர் இருக்கப் போகிறார்!

அமைச்சரவையில் இணைந்துள்ள செந்தில் பாலாஜி, கோவி. செழியன், ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோருக்கும் வாழ்த்துகள்.

மிகுந்த நம்பிக்கையோடு நமக்கு வாக்களித்துள்ள மக்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News