தமிழ்நாடு

போச்சம்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: அரசு பள்ளியில் 12 கண்காணிப்பு கேமரா பொருத்தம்

Published On 2025-02-11 14:57 IST   |   Update On 2025-02-11 14:57:00 IST
  • கடந்த 5 நாட்களுக்கு பின்பு நேற்று வழக்கமாக பள்ளி தொடங்கப்பட்டது.
  • மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் மருத்துவ குழுவினரால் வழங்கும் முகாம் நடைபெற்றது.

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளி மாணவியை அதே பள்ளியில் பணியாற்றிய 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து அதில் தொடர்புடையதாக கூறப்பட்ட சின்னசாமி, பிரகாஷ், ஆறுமுகம் ஆகிய 3 ஆசிரியர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த 3 ஆசிரியர்களை பணியிடம் நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தாம்சன் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பள்ளியில் கடந்த 5 நாட்களுக்கு பின்பு நேற்று வழக்கமாக பள்ளி தொடங்கப்பட்டது.

இதில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருகை தந்தனர். முன்னதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கலெக்டர் தினேஷ்குமார் நேரில் சந்தித்தபோது கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையில் பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். இதில் தொடர்புடைய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தனர்.

இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் 12 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் பணி தொடங்கியது. மேலும் மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் மருத்துவ குழுவினரால் வழங்கும் முகாம் நடைபெற்றது. கிராமத்தில் மற்றும் பள்ளி வளாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News