தமிழ்நாடு
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை பெயர் பலகை திறப்பு
- காம்தார் நகர் முதன்மை சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பெயரை சூட்ட கோரிக்கை.
- கோரிக்கையை ஏற்று அரசு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டியுள்ளது.
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவாக சென்னை நுங்கம்பாக்கத்தில் அவர் வாழ்ந்த வீடு அமைந்துள்ள காம்தார் நகர் முதன்மை சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பெயரை சூட்ட வேண்டும் என்று அவரது மகன் சரண் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி இன்று சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை எனப்பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கே.என். நேரு உள்ளிட்டோர் மற்றும் எஸ்.பி.பி. குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.