தமிழ்நாடு
ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் 19 புதிய பேருந்து நிலையங்கள்- அமைச்சர் கே.என்.நேரு
- நகராட்சிகளில் ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
- 11 பேரூராட்சிகளிலும் ரூ.49 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்றார்.
நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.
அப்போது அவர், 19 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
விவாதங்கள் மீது பதிலுரை வழங்கி அமைச்சர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:-
கும்பகோணம் மாநகராட்சி, அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகளில் ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், பாலப்பள்ளம், நாட்டரசன்கோட்டை, புதுப்பாளையம், ஆரணி, குன்னத்தூர், உடன்குடி, ஏர்வாடி, கும்மிடிப்பூண்டி, பரமத்தி, திருபுவனம், பருகூர் ஆகிய 11 பேரூராட்சிகளிலும் ரூ.49 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.