10 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
- கே.கே.நகர் சிவன் பூங்காவை ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி.
- அம்பத்தூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.39 கோடியே 75 லட்சம் செலவில் போரூரில் டாக்டர் எம்.எஸ்.சுவாமி நாதன் ஈரநில பசுமை பூங்கா, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் மற்றும் சாத்தாங்காடு இரும்பு மற்றும் எஃக்கு சந்தை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை திறந்து வைத்து, ரூ.70 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டிலான 10 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் போரூர், ராமாபுரத் தில் சுமார் 16.63 ஏக்கர் பரப்ப ளவில் ரூ.15.75 கோடி செலவில் அமைக்கப்பட்ட டாக்டர் எம். எஸ். சுவாமி நாதன் ஈரநில பசுமை பூங்கா, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ரூ. 4 கோடி செலவில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை, சூரிய மின்சக்தி அமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள்.
திருவொற்றியூர், சாத்தாங்காடு இரும்பு மற்றும் எக்கு சந்தை வளாகத்தில் ரூ.20 கோடி செலவில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை, மின்சார அறை, மின்னணு எடை பாலம், குடிநீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் ரூ.39.75 கோடி செலவில் 3 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
காட்டுப்பாக்கம், இந்திரா நகரில் ரூ.19.10 கோடி மதிப்பீட்டிலும், போரூர், கணேஷ் நகரில் ரூ.12.93 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட உள்ள பன்னோக்கு மையங்கள்.
சென்னை, சேத்துப்பட்டு, அப்பாசாமி தெருவில் 1.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கால் பந்து மைதானம், குத்தம் பாக்கம், பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிட்கோ மற்றும் புதூர்மேடு ஆகிய இடங்களில் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள்.
குத்தம்பாக்கம், புறநகர் பேருந்து முனையத்தில் எஸ்.இ.டி.சி. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளுக்கு ரூ.9.55 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்படவுள்ள கூடுதல் வாகன நிறுத்துமிடம், சைதாப் பேட்டை, அம்மா பூங்காவை ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரசு மேல்நிலைப் பள்ளி யில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்.
கே.கே.நகரில் உள்ள சாலை சந்திப்பு மற்றும் சிவன் பூங்காவை ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் மேம் படுத்தும் பணி, தாம்பரம், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பூங்கா மற்றும் நல்லதண்ணீர் குளத்தை ரூ.5.80 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, அம்பத்தூர் பானு நகரில் ரூ.7.01 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் என மொத்தம் ரூ.70.70 கோடி மதிப்பீட்டில் 10 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.