தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 19-ந்தேதி தாக்கல்

Published On 2025-03-07 14:29 IST   |   Update On 2025-03-07 14:29:00 IST
  • மேயர் ஆர்.பிரியா புதிய திட்டங்கள் வளர்ச்சி பணிகள் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார்.
  • பட்ஜெட் மீதான விவாதம் 21-ந் தேதி நடைபெறுகிறது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் வரி விதிப்பு மற்றும் நிலைக்குழு தலைவர் சர்பா ஜெயாதாஸ் 2025-2026-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். மேயர் ஆர்.பிரியா புதிய திட்டங்கள் வளர்ச்சி பணிகள் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார்.

இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தும் பணிகள், அதிகரித்து வரும் போக்குவரத்து, நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதம் 21-ந் தேதி நடைபெறுகிறது. 

Tags:    

Similar News